கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமூக மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
என்னென்ன பணிகள், யார் விண்ணப்பிக்கலாம், என்ன பணிக்கு என்ன தகுதி இருக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இந்த செய்தி தொகுப்பில் நீங்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.வழக்குப் பணியாளர் காலியிடம் 1தகுதி
சமூகப் பணி சோசியாலஜி சைக்காலஜி கிளினிக்கல் சைக்காலஜி உள்ளிட்ட பாடங்களில் முதல் நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இரவு 21 வயதிற்கு மேற்பட்டவர் ஆகவும் 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவர் ஆக இருத்தல் வேண்டும்.
24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊதியம்: இந்தப் பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் 18,000 சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. பல்நோக்கு உதவியாளர் காலியிடம்: 2தகுதி
எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாவது வகுப்பில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
21 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
நிர்வாக அமைப்பின் கீழ் பணி புரிந்தவராக இருத்தல் வேண்டும்.
24 மணி நேர சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
ஊதியம்: இந்தப் பணியை சேரும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது? வழக்குப் பணியாளர் அல்லது பல்நோக்கு உதவியாளர் பணியில் சேர விருப்பம் உள்ள நபர்கள் https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/05/2025053111.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி தேவையான கல்வி சான்றிதழ்களை நகல் எடுத்து விண்ணப்பத்துடன் சேர்த்து கீழ்கண்ட முகவரிக்கு ஜூன் 30 2025 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். கல்விச் சான்றிதழ் நகல்கள் சான்றொப்பமிடப்பட்டு இருக்க வேண்டியது முக்கியமாகும். இந்த பணியிடத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இங்கே கிளிக் செய்து படித்துக்கொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை 641 018.தொடர்பு எண் 0422 2305156
0 Comments