தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பயனடையும் வகையில், தாட்கோ மூலமாக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இவற்றில், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற திட்டமாக, 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' உள்ளது.
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளை, நிலம் உடையவர்களாக மாற்றுவதே" இத்திட்டத்தின் நோக்கம்.
நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் என்பது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களை நில உடைமையாளர்களாக ஆக்குவதற்காக தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம், பயனாளிகள் விவசாய நிலம் வாங்குவதற்கு மானியம் மற்றும் கடன் வசதி பெறுகின்றனர். இத்திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கானதாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துதல். விவசாயத் தொழிலாளர்களாக உள்ள பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றுதலாகும்.
திட்டத்தின் கீழ் கிடைக்கும் உதவிகள்:
விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பில் 50% மானியம் அல்லது அதிகபட்சம் ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும் நிலம் வாங்குவதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வசதி செய்து தரப்படும்.
மானிய விபரங்கள் :
திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது ஐந்து ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். நிலத்தின் விலை சந்தை மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்படும்.
முத்திரைத்தாள் மற்றும் பதவி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
தகுதி:
விண்ணப்பதாரர் 18-55 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் எந்த விவசாய நிலத்தையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்:
விருப்பப்பட்ட திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணையதள முகவரி: www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
0 Comments