கடற்படை பள்ளியில் காத்திருக்கும் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விபரங்கள் இதோ

Follow Us

கடற்படை பள்ளியில் காத்திருக்கும் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விபரங்கள் இதோ

கோயம்புத்தூரில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
                                                                       



என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்- Trained Graduate Teacher

காலியிடங்கள்: 04கல்வி தகுதி:(i) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பி.ஏ/பி.எஸ்சி., பட்டம் வழக்கமான பாடமாகப் படித்து, தொடர்புடைய பாடத்தில் (இயற்பியல் மற்றும் வேதியியல்), இந்தி ஆகியவற்றில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.(ii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய பாடத்தில் வழக்கமான படிப்பாக பி.எட். பட்டம் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Peon cum Day Watchman

காலியிடங்கள்: 01கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வுநேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தை https://ncscoimbatore.nesnavy.in/ என்ற அதிகாரபூர்வ இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து , முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஸ்கேன் செய்து, recruitmentncscbe16@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05 ஜூன் 2025 அன்று மாலை 6 மணிக்குள் அனுப்ப வேண்டும்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.06.2025

Post a Comment

0 Comments