தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைyன் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சென்னை எழும்பூர் -அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலியாக காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம் , என்ன தகுதி வேண்டும், எங்கே விண்ணப்பிப்பது, உள்ளிட்டத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் படித்துத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
மேளக்குழு
காலியிடங்கள்: 01சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசைத்துறையில் நன்கு பயிற்சி பெற்ற சான்றிதழ் அல்லது மதம் சார்ந்த இசைப்பள்ளி பயிற்சி சான்றிதழ் அல்லது தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பரிசாரகர்
காலியிடங்கள்: 01சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.13,200 முதல் ரூ.41,800 வரை ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. தகுதி:
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
திருக்கோயிலில் நைவேத்திய மற்றும் பிரசாதங்கள் நன்கு தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் பிரசாதம் தயார் செய்தல் மற்றும் விநியோகம் செய்யவும்தெரிந்திருக்க வேண்டும்.
திருக்கோயில் பழக்கவழக்கங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
வைகாசனம் ஆகமப்படி பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 01சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. கல்வி தகுதி: குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அத்யாபகம்
காலியிடங்கள்: 01சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏதேனும் ஆகம பள்ளி அல்லது அரசு சார்ந்த வேத பாடசாலையில் 3 ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
பகல் காவலர்
காலியிடங்கள்: 04சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
இரவு காவலர்
காலியிடங்கள்: 02சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்
திருவலகு
காலியிடங்கள்: 03சம்பளம்: இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை ஊதியமாக வழங்கப்பட இருக்கிறது. கல்வி தகுதி: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லைதேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது ?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு "செயல் அலுவலர், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில், எண். 6, எம்.என்.பி. கோயில் தெரு, எழும்பூர், சென்னை - 8" என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.மேலும் ரூ.35 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.05.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2025 மாலை 5.45 மணி வரை
0 Comments