பாதுகாப்பு படையில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பல்வேறு இளைஞர்களுக்கு இருப்பது இயல்பு. பள்ளி பருவத்தை முடித்துவிட்டு, நேரடியாக பாதுகாப்பு படைப்பில் சேர்ப்பதற்கான பல்வேறு வாய்ப்புகளையும் இந்திய அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் நேரடியாக இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்வதற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
பள்ளிப்படிப்பை முடித்துள்ள நபர்கள் நேரடியாக விமானப்படையில் சேர விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கு தேர்வு ஏதும் கிடையாது நேரடி உடட்ட தகுதி மற்றும் கல்வித் தகுதி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்காக தாம்பரம் விமானப்படை நிலையத்தில் உள்ள 8 ASC-யில் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது இந்த முகாம் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பணியிடங்கள்:
இந்திய விமானப்படை(OS)யில் வர்த்தகராக ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்வதற்கான வாய்ப்பு திறந்து உள்ளது.
முகாம் தேதிகள்:
ஆண்களுக்கு செப்டம்பர் 2, 2025 காலை 4 மணி முதல் ஆட்சேர்ப்பு முகாம் தொடங்குகிறது.
பெண்களுக்கு செப்டம்பர் 5, 2025 காலை 5 மணி முதல் முகாம் தொடங்குகிறது.
முகாம் நடைபெறும் இடம்:
எண். 8 ASC, தாம்பரம் விமானப்படை நிலையம், சென்னை - 600 046
அடையாளம்: விமானப்படை சாலை
அருகிலுள்ள ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம்: தாம்பரம் (கிழக்கு)
தகுதி:
50% மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50% உடன் 12வது / அதற்கு சமமான (எந்தப் பிரிவிலும்) தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது:
ஜனவரி 01, 26 நிலவரப்படி 17 1½ வயதுக்கு மேல் முதல் 21 வயதுக்குக் குறைவானவர்கள் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் அணுகுவதன் மூலம் பெறலாம்
0 Comments