நாமக்கல் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செவிலியர், பார்மசிஸ்ட், லேப் டெக்னீஷியன், மருத்துவமனை பணியாளர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வர்வேற்கப்படுகிறது.
புதியதாக ஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களில் கீழ் உள்ள பணியிடங்கள் என மொத்தம் 101 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
துணை செவிலியர் 6
பார்மசிஸ்ட் 1
லேப் டெக்னீஷியன் 2
செவிலியர் 86
பல்துறை மருத்துவமனை பணியாளர் 3
அக்குபேஷனல் தெரபிஸ்ட் 1
சமூக சேவகர் 1
சிறப்பு கல்வியாளர் 1
மொத்தம் 101
வயது வரம்பு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
துணை செவிலியர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். மேலும் 2 ஆண்டு ANM படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பார்மசிஸ்ட் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பார்மசி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் பார்மசி பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
லேப் டெக்னீஷியன் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மருத்துவ ஆய்வகம் தொழில்நுட்ப படிப்பை முடித்திருக்க வேண்டும்.
செவிலியர் பதவிக்கு DGNM/ நர்சிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பல்துறை மருத்துவமனை பணியாளர் பதவிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அக்குபேஷனல் தெரபிஸ்ட் பதவிக்கு அதற்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சமூக சேவகர் பதவிக்கு சமூக சேவை பாடப்பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
சிறப்பு கல்வியாளர் பதவிக்கு அதற்கான இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்
துணை செவிலியர் பதவிக்கு ரூ.14,000 சம்பளம் வழங்கப்படும்.
பார்மசிஸ்ட் பதவிக்கு ரூ.15,000, லேப் டெக்னீஷியன் பதவிக்கு ரூ.13,000 வழங்கப்படும்.
செவிலியர் பதவிக்கு ரூ.18,000, பல்துறை மருத்துவமனை பணியாளர் பதவிக்கு ரூ.8,500 வழங்கப்படும்.
அக்குபேஷனல் தெரபிஸ்ட், சமூக சேவகர், சிறப்பு கல்வியாளர் பதவிகளுக்கு ரூ.23,000 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், விண்ணப்பதார்களின் தகுதியை பொருட்டு நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
செவிலியர் உட்பட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://namakkal.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பித்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிகள் தற்காலிகமானதே, பணியில் சேருவதற்கும் முன்பு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் அப்பதவிகளுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 4 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம் - 637003.
தொலைபேசி எண் - 04286-281424.
முக்கிய நாட்கள்
விவரம் தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 04.08.2025 மாலை 5 மணி வரை
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ், கல்வித்தகுதி சான்றீதழ்கள், அடையாள அட்டை, சிறப்பு தேவை இருப்பின் அதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments