தமிழ்நாடு போக்குவரத்து கழகம், மின் பகிர்மானக் கழகத்தில் வேலை; TNPSC தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பம் தொடக்கம்!

டிப்ளமோ மற்றும் ஐடிஐ கல்வித்தகுதி அடிப்படையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதர்கான டிஎன்பிஎஸ்சி ஒருகிணைந்த தொழில்நுப்ட பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                                                                              


2025-ம் ஆண்டில் 1,910 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இக்கல்வி தகுதியில் அரசு வேலையில் சேர விரும்புகிறவர்கள் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (ஜூன் 13) முதல் விண்ணப்பிக்கலாம்.


டிஎன்பிஎஸ்சி ஒருகிணைந்த தொழில்நுப்ட பணிகள் தேர்வு 2025 (டிப்ளமோ/ஐடிஐ)

தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் ஒங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இத்தேர்வு நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் மற்றும் டிப்ளமோ/ஐடிஐ என மூன்று பிரிவுகளில் நடத்தப்படுகிறது.


தொழில் மற்றும் வணிகம், கனிமவள நிறுவனம், தொல்லியல், கைத்தறி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, வேலைவாய்ப்பு துறை, தோட்டக்கழகம், ரப்பர் கழகம், வீட்டு வசதி வாரியம், வேளாண்மை, போக்குவரத்து துறை, மின் பகிர்மான கழகம் ஆகியவற்றில் உள்ள 1,910 காலிப்பணியிடங்களை தேர்வின் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


என்னென்ன பதவிகள் நிரப்பப்படும்?

உதவி மேலாளர், இளநிலை பொறியாளர், வேதியியலாளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், வரைதொழில் அலுவலர், உதவி ரப்பர் தயாரிப்பாளர், அளவர, பல்வேறு பிரிவுகளில் இளநிலை பயிற்சி அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி தோட்டக்கலை உதவியாளர், போக்குவரத்து துறை பல்வேறு பிரிவுகளில் இளநிலை தொழில் வினைஞர் (Junior Training Officer) உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது.


வயது வரம்பு

01.07.2025 தேதியின்படி, இளநிலை தொழில் வினைஞர் பதவிக்கு மட்டும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 40 வயது வரை இருக்கலாம். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கு தளர்வு உள்ளது. இதர பதவிகளுக்கு வயது வரம்பு கிடையாது. ஒசி பிரிவை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு உள்ளன.


கல்வித்தகுதி

அந்தந்த பதவிகளுக்கான தொழிற்பிரிவுகளில் டிப்ளமோ/ ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு சில பதவிகளுக்கு பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.


சம்பள விவரம்

இத்தேர்வில் நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கு நிலை 1 முதல் நிலை 20 வரை தமிழ்நாடு அரசு ஊதியத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை

இத்தேர்வில் நேர்முகத் தேர்வு கிடையாது. இரண்டு தாள்கள் கொண்டு தேர்வு நடத்தப்படும். முதல் தாள் தகுதித் தாள் ஆகும். இரண்டாம் தாள் அந்தந்த பாடப்பிரிவுகளுக்கான தாள் ஆகும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் அமையும். தேர்சில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிப்பார்ப்பு நடத்தப்பட்டு கலந்தாய்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணம் தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.


இன்று முதல் விண்ணப்பம் தொடங்கியுள்ள நிலையில், ஜூலை 12 வரை பெறப்படுகிறது. விண்ணப்பம் திருத்த அவகாசம் ஜூலை 16 முதல் 18 வரை மேற்கொள்ளலாம். முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வுகள் செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறும்.


முக்கிய நாட்கள்


விவரம் தேதிகள்

விண்ணப்பம் தொடங்கப்படும் நாள் 13.06.2025

விண்ணப்பிக்க கடைசி நாள் 12.07.2025

விண்ணப்பம் திருத்தம் செய்ய கால அவகாசம் 16.07.2025 முதல் 18.07.2025

முதல் தாள் தேர்வு 31.08.2025

இரண்டாம் தாள் தேர்வு 07.09.2025, 11.09.2025 முதல் 15.09.2025 வரை

டிப்ளமோ மற்றும் ஐடிஐ முடித்து அரசு வேலைக்கு எதிர்பார்ப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்

Post a Comment

Previous Post Next Post