அஞ்சல் துறையின் ஆதார் சிறப்பு முகாம் வரும் 16ம் தேதி துவங்கி ஒரு மாத காலம் நடைபெற உள்ளதாக கடலூர் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கலைவாணி தெரிவித்துள்ளார்.
ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும்.
ஆதார் சிறப்பு முகாம் குறித்து வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதவது:
இந்திய அஞ்சல் துறை கடலூர் கோட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள சேவை மையங்கள் மூலம் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் பல்வேறு பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்களில் வரும் 16ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களில் நடக்கிறது.
சிறப்பு மையங்களில் புதிதாக ஆதார் பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், மொபைல் எண் இணைத்தல் போன்ற சேவைகள் செய்யப்படுகிறது. ஆதாரில் திருத்தம் செய்ய 50 ரூபாய் கட்டணமும், ஆதார் புதுப்பிக்க 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு புதியதாக ஆதார் எடுக்க எந்த கட்டணமும் இல்லை. பொதுமக்கள் தங்கள் கிராமங்களிலோ அல்லது நகரிலோ ஆதார் சிறப்பு முகாம் தேவைப்படுமானால் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 80984 48183 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆதார் திருத்தம் செய்தல், புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் எடுக்க, தங்களின் உரிய ஆவணங்கள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆதாரின் பயன்பாடு
இந்தியாவில் எங்கிருந்தும் அடையாளம் மற்றும் முகவரிக்கு ஆதாரமாக ஆதார் செயல்படுகிறது.
அடையாளங்களை நிறுவுவதற்கான நோக்கத்திற்காக எந்த வயதினருக்கும் (குழந்தைகள் உட்பட) ஆதார் என்பது பொருள்.
ஒரு தனிநபருக்கு ஒரே ஒரு தனித்துவமான ஆதார் எண் மட்டுமே வழங்கப்படும், ஆனால் பல தனிப்பட்ட அடையாள எண்கள் அல்ல.
ஆதார் எண் ஒரு தனிநபரின் முழு வாழ்க்கைக்கு செல்லுபடியாகும், மேலும் அவ்வப்போது மாற்றவோ புதுப்பிக்கவோ தேவையில்லை.
வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, மின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அடையாளத்தை நிறுவ வேண்டிய பல இடங்களில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தலாம்.