ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை உயர்வு - அரசாணை

 தமிழக சட்டபேரவையில் கடந்த ஏப்.28ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் தொடர்ந்து அரசாணைகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதன்படி மேலும் 2 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

                                                                               


இதன்படி, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்னாள் கிராம பணியமைப்பு உட்பட C மற்றும் D பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் நான்கு லட்சத்து எழுபத்து ஓராயிரம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசிற்கு ஏற்படும் கூடுதல் செலவினம் சுமார் 24 கோடி ரூபாயாக இருக்கும்.

மேலும்,ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தவும் அரசிணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உயர்வால், சுமார் 52 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இதனால் பத்து கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

Post a Comment

0 Comments