கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) 50 பிரதம சங்கங்களின் மூலம் தினமும் சராசரியாக 8500 லிட்டர் பால் கொள்முதல் செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படுகிறது.
தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு மருத்துவ சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒன்றிய பணிநிலைத்திறனில் ஒப்பந்த அடிப்படையிலான ஒதுக்கீடு செய்யப்பட்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பணி : கால்நடை உதவி மருத்துவர்
காலியிடம் : 1 வயது வரம்பு : இந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் . தகுதி : சொந்தமாக இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் இந்த தகுதி பெறுவார் . எப்படி சேருவது ? தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள், தங்களது முழுமையான விவரங்களுடனும், உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ கவுன்சில் பதிவு சான்றிதழ்களுடனும் வரும் 11.06.2025 அன்று காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், லிட்., நாகர்கோவில் என்ற முகவரியில் நடைபெறும் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.விண்ணப்பக்கட்டணம் : ஏதுமில்லை குறிப்பு : இது நிரந்தர பதவி அல்ல. ஒப்பந்த அடிப்பையில் சேர்க்கப்படும் தற்காலிக பனி மட்டுமே
0 Comments