நல்ல நேரம் வந்தாச்சு.. மனைவியுடன் சேர்ந்து முதலீடு.. பண மழை கொட்டும் டைம் டெபாசிட் திட்டம்!

 ஒவ்வொரு மாதமும் நாம் வாங்கும் சம்பளத்தை எதிர்காலத் தேவைக்காகவும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், திடீரென்று பணத் தேவை ஏற்பட்டால் அதைச் சமாளிப்பது கடினமாக இருக்கும்.

அதற்கு ஏதேனும் சேமிப்புத் திட்டத்தில் பணத்தைப் போட்டு வைப்பது நல்லது. பணத்தை சேமிக்க முடிவு செய்துவிட்டால் அதில் நல்ல வருமானம் தரக்கூடிய அளவுக்கு ஒரு சிறந்த சேமிப்புத் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் பணத்தைப் போட்டு வைக்கலாம்.

                                                                               


போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்!

ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்தது. இதன் காரணமாக பல்வேறு வங்கிகள் தங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இதனால் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ளது. இதுபோன்ற சூழலில், தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் நல்ல வருமானம் கிடைக்கிறது. தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்தத் திட்டங்கள் முன்பு போலவே நல்ல வருமானத்தை வழங்குகின்றன.

டைம் டெபாசிட் திட்டம்!

தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் டைம் டெபாசிட் திட்டம் (நேர வைப்புத் தொகை) மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் மக்களுக்கு 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை நிலையான வட்டி வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டம் வங்கிகளில் உள்ள ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போலவே செயல்படுகிறது. மேலும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உறுதியான வருமானத்தை இத்திட்டம் வழங்குகிறது.

ஆண்டுக்கு ஏற்ப வட்டி!

தபால் நிலையங்கள் தற்போது 1 வருட நிலையான வைப்புத்தொகைக்கு 6.9 சதவீத வட்டியையும், 2 ஆண்டுகளுக்கு 7 சதவீத வட்டியையும், 3 ஆண்டுகளுக்கு 7.1 சதவீத வட்டியையும், 5 ஆண்டுகளுக்கு 7.5 சதவீத வட்டியையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரே வட்டி விகிதம் பொருந்தும். முதலீட்டாளர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரே வட்டி வருமானமே கிடைக்கும்.

மனைவி பெயரில் கணக்கு!

நீங்கள் உங்கள் மனைவியின் பெயரில் தபால் நிலையத்தின் 2 வருட டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வுக்குப் பிறகு உங்களுக்கு மொத்தம் ரூ. 1,14,888 வருமானம் கிடைக்கும். இதில் உங்களுடைய அசல் முதலீடு ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 14,888 வட்டித் தொகை அடங்கும். இந்தத் திட்டம் இந்திய அரசால் நடத்தப்படுவதால் இந்த முதலீட்டில் ஆபத்து எதுவும் இல்லை. ரிஸ்க் இல்லாமல் பணத்தைப் போடலாம்.

ஆபத்து இல்லாத முதலீடு!

அனைத்து தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களும் இந்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்படுகின்றன. எனவே இந்தத் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும். நஷ்டமே இருக்காது. அதிக லாபம்தான் கிடைக்கும். நீங்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் நிலையான வருமானத்தைப் பெற விரும்பினால், தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டம் ஒரு சிறந்த விருப்பமாக இருக்கும்.

முதலீடு செய்யலாம்!

பொதுவாக வங்கிகளில் உள்ள திட்டங்களில் வட்டி விகிதங்கள் வங்கிகளுக்கு இடையே வேறுபடும் என்றாலும், தபால் நிலையத் திட்டங்கள் நிலையானவை. எனவே, குறைந்த ஆபத்துள்ள முதலீடாகவும், எதிர்காலப் பாதுகாப்பிற்காக தபால் நிலைய டைம் டெபாசிட் போன்ற திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களுடைய வருமானம், குடும்பச் செலவுகள் மற்றும் எந்தத் திட்டத்தில் அதிக நன்மை உங்களுக்குக் கிடைக்கும் என்று ஆலோசித்து உங்களுக்கான ஒரு நல்ல திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Post a Comment

0 Comments