தொழில்நுட்பப் பிரிவில் 6,734 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே சிக்னல், தொலைத்தொடா்பு உட்பட பல பிரிவுகளில் நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் 51 பிரிவுகளில் 6,734 தொழில்நுட்பப் பணியாளா்கள் இடங்கள் காலியாக உள்ளது என்ற விவரம் இணையவழியில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த விவரங்கள் பெங்களூரில் உள்ள ரயில்வே பணியாளா்கள் சோ்ப்பு வாரியத்தின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை முறையாக ஆய்வு செய்து பணியாளா் தோ்வு நடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த முடிவை ரயில்வே ஊழியா் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது பாதுகாப்பான ரயில் பயணத்தை மேலும் உறுதி செய்ய முடியும்.
ஊழியா்களுக்கான பணி நெருக்கடி குறையும் என சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்பு ரயில்வே சிக்னல் மற்றம் தொலைத்தொடா்புத் துறையில் 2017ம் ஆண்டுக்கு பிறகு 8 ஆண்டுகளாக பல பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments