மிகப் பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியில் 'ஜீவன் ஆசாத்' என்ற காப்பீடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இது வெறும் காப்பீடு திட்டம் மட்டுமில்லை முதலீட்டுன் சேர்ந்த ஒரு ஸ்கீம் ஆகும். இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் எதிர்காலத்துக்கான சேமிப்பும், குடும்பத்துக்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
ஜீவன் ஆசாத் திட்டத்தின் பாலசி காலங்கள் 15 முதல் 20 ஆண்டுகள் . ஆனால் நீங்கள் மொத்த பாலிசி காலத்தில் 8 ஆண்டுகள் போக மீதமுள்ள ஆண்டுகளுக்கு மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதுமானது. பிறந்து 90 நாட்கள் ஆன குழந்தைகள் முதல் 50 வயது பெரியவர்கள் வரை இந்தத் திட்டத்தில் சேர முடியும். பாலிசியின் குறைந்தபட்ச முதிர்வு வயது 18, அதிகபட்ச முதிர்வு வயது 70 ஆகும்.
முதிர்வுக் காலத்தில் உறுதி செய்யப்பட்ட உத்தரவாதமான பணம் பாலிசிதாரருக்குக் கிடைக்கும். குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.2 லட்சம், அதிகபட்ச அடிப்படை உத்தரவாத தொகை ரூ.5 லட்சம் ஆகும். பிரீமியத்தை ஆண்டுக்கு ஒருமுறையோ, அல்லது அரையாண்டு, காலாண்டு அடிப்படையிலோ, மாதந்தோறுமோ என அவரவர் வசதிக்கேற்ப செலுத்தலாம். எதிர்பார்க்காத சூழ்நிலையில் ஒருவேளை பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால் இத்திட்டத்தின் மூலம் பாலிசிதாரரின் குடும்பத்துக்கு நிதி வழங்கப்படும். மேலும் இந்தத் திட்டத்தில் அவசர தேவைக்காக கடன் பெறும் வசதியும் உள்ளது. ஒருவேளை இதில் குழந்தைகளின் பெயரில் பாலிசி இருக்கும்போது இறப்பு பலனில் வரி வட்டி உள்ளிட்ட அம்சங்கள் கிடையாது என்பதை நோட் செய்து கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தில் முதல் பிரீமியமாக பெற ரூ. 25,120 செலுத்த வேண்டும். 2வது ஆண்டில் இருந்து ரூ. 24,578 என் மொத்தம் 12 ஆண்டு வரை செலுத்தினால் போதும். இதன் மூலம் முதிர்வு கலத்தில் 5 லட்சம் ரூபாயும், மொத்த பிரீமியமும் ரூ. 2,95,478 உங்கள் கையில் இருக்கும். மேலும் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவர்களை அணுகலாம்.
0 Comments