மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாகவே 8-வது ஊதியக்குழுவின் உருவாக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் டிசம்பர் 2025இல் நிறைவடைய உள்ள நிலையில், 8-வது ஊதியக்குழுவுக்கான பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரவேண்டும். ஆனால், இதில் சற்று தாமதம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் பலவிதமான கேள்விகள் தற்போது எழுகிறது. அதாவது, மாத ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்..? எந்தெந்த அலவன்சுகளில் ஏற்றம் இருக்கும்..? போன்ற சந்தேகங்கள் உள்ளன. அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 20% முதல் 30% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8-வது ஊதியக்குழுவின் மூலம் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
அதேசமயம், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை தீர்மானிப்பதில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இது 7-வது ஊதியக்குழுவில் 2.57 ஆக இருந்த நிலையில், தற்போது 2.86ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமே ரூ.7,000இல் இருந்து ரூ.18,000ஆக உயர்ந்தது. ஆனால், 8-வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும்போது, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000இல் இருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், தற்போது ஓய்வூதியதாரர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதத்திற்கு ரூ.9,000 ஆகும். அரசு ஊழியர்களின் அதிகபட்ச ஓய்வூதியம் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1,25,000 ஆகும். இதுவே, 8-வது ஊதியக் குழுவில் ரூ.3 லட்சமாக உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ஊதிய உயர்வுக்கு ஏற்ப NPS & CGHS திட்டங்களிலும் மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
0 Comments