வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்திய ரயில்வே துறை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் வகுப்பு, எக்ஸ்பிரஸ் மற்றும் ஏசி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் டிக்கெட் எந்தளவுக்கு உயரும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்திய ரயில்வே துறை வரும் ஜூலை 1ம் தேதி கட்டண கட்டமைப்பை மாற்றியமைத்தாக அறிவித்துள்ளது.. குறுகிய தூரம் மற்றும் புறநகர் வழித்தடங்களில் ரயில் டிக்கெட் உயரப்போவதில்லை. அதேநேரம் தொலைதூரப் பயணங்கள் மற்றும் ஏசி வகுப்புகளுக்கு டிக்கெட் விலை உயர்கிறது.
நீங்கள் வழக்கமாக இரண்டாம் வகுப்பில் பயணம் செய்பவராக இருந்தால், உங்கள் பயணம் 500 கி.மீ வரை இருந்தால், கட்டண உயர்வு இருக்காது. 500 கிமீ வரை சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு ரயில் டிக்கெட் உயர்வு இல்லை. அதேநேரம் 500 கி.மீக்கு மேல் பயணிப்போருக்கு டிக்கெட் உயர்வு இருக்கும்.
ஏசி அல்லாத மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்பவர்கள் ஒரு கி.மீட்டருக்கு 1 பைசா என்ற விகிதத்தில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. உதாரணமாக 1,000 கி.மீ தூரப் பயணத்திற்கான டிக்கெட் கட்டணம் முன்பு இருந்ததை ரூ.10 அதிகரிக்கும்.
மறுபுறம் ஏசி வகுப்புகளுக்கும் அதாவது, ஏசி சேர் கார், ஏசி 3-டயர், 2-டயர் அல்லது முதல் வகுப்பு ஏசி என எல்லா ஏசி வகுப்புகளுக்கும் ஒரு கி.மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்படுகிறது. அதாவது 1,000 கி.மீ பயணத்திற்கு, நீங்கள் முன்பு செலுத்தியதை விட ரூ.20 அதிகமாகச் செலுத்த வேண்டும்.
0 Comments