பாதுகாப்பு துறையின் கீழ் ராணுவத்திற்கான வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் ஒரு பகுதியான, தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது.
இங்கு காலியாக உள்ள ஜூனியர் டெக்னீஷியன் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் உள்ள 1,850 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்கள் 1 வருடத்திற்கு ஒப்பந்த முறையில் நிரப்பப்படும்.
பணியின் விவரங்கள்
பிளாக்ஸ்மித், கார்பெண்டர், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்டோபிளேட்டர், எலெக்ட்ரிஷியன், பிட்டர் ஜென்ரல், எலெக்ட்ரானிஸ், மெக்கானிஸ்ட், வெல்டர், பெயிண்டர், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகளில் ஜூனியர் டெக்னீஷியன் பதவியில் 1850 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதில் பொதுப் பிரிவில் - 925, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 163, ஒபிசி - 435, எஸ்சி - 313, எஸ்டி - 14 என நிரப்பப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு 62 மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு 177 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். மத்திய அரசின் விதிமுறைகளின்படி, ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருட்ங்கள் வரை தளர்வு உள்ளது. அதே போன்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் வரை தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் உள்ள ஜூனியர் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அந்தந்த பாடப்பிரிவுகளில் ஐடிஐ தகுதி அல்லது தொழிற்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆபரேட்டர் பிரிவிற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக ஓட்டுநர் உரிமம் மற்றும் 2 வருட அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ரிக்கல் மற்றும் Sand & Shot Blaster பதவிக்கும் 10-ம் வ்கௌப்பு தேர்ச்சியுடன் 2 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்
ஜூனியர் டெக்னீஷியன் பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.21,000 வழங்கப்படும். இதர கொடுப்பனைகள், அகவிலைப்படி ஆகியவை சேர்ந்து வழங்கப்படும்.மேலும் ஒரு வருடத்திற்கு 3% ஊதிய உயர்வு உண்டு. இவையில்லாமல் மாதம் ரூ.3,000 இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து, திறன் தேர்வு நடத்தப்படும். கல்வித்தகுதியில் 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 மதிப்பெண்கள், ஒபிசிக்கு 3 மதிபெண்கள் தளர்வு உண்டு.
தொழிற் திறன் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும். அதற்கான இறுதி பட்டியல் வெளியிடப்படும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஜூனியர் டெக்னீஷியன் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://oftr.formflix.org/home என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்னும் தொடங்கப்படவில்லை. விண்ணப்பம் தொடங்கியவுடன் தகுதியானவர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் தொடங்கம் மற்றும் முடிவடையும் தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், அடையாள அட்டை, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்துகொள்ளலாம்.
0 Comments