சென்னையிலுள்ள 6 வட்டங்களில் பட்டா பெறுவதற்கான வருவாய் தீா்வாய முகாம் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் உள்ள 17 வட்டங்களில் திருவள்ளூா் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து பிரிந்து சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்ட அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா், மதுரவாயில், சோழிங்கநல்லுாா் மற்றும் ஆலந்துாா் ஆகிய 6 வட்டங்களுக்கு 1,434-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாய முகாம் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் அந்தந்த வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
இதன்படி, அம்பத்தூா் வட்டத்தில், சென்னை மாவட்ட ஆட்சியா் முன்னிலையிலும், மாதவரம் வட்டத்தில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் முன்னிலையிலும், மதுரவாயிலில் மத்திய சென்னை வருவாய் கோட்டத்தின் வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையிலும், திருவொற்றியூா் வட்டத்தில், வடசென்னை வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையிலும், சோழிங்கநல்லூா் வட்டத்தில், தென் சென்னை வருவாய் கோட்டத்தின் வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையிலும், ஆலந்தூா் வட்டத்தில் சென்னை மாவட்ட ஆய்வுக்குழும அலுவலா் முன்னிலையிலும் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
இதில், அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பட்டாதாரா்கள் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பட்டா பெற்றுக்கொள்ளலாம். மேலும், இதர குறைகள் சம்பந்தமான மனுக்களையும் கொடுத்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
0 Comments