12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு வந்திருக்கு.. விபரங்கள் இதோ

 தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                             


இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.Assistant cum Data Entry Operatorகாலியிடங்கள்: 01சம்பளம்: இந்த வேலையில் சேரும் நபர்களுக்கு Rs.11,916/- மாத ஊதியமாக வழங்கப்படும். கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/சமமான வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. கணினிகளில் டிப்ளமோ/சான்றிதழ். கீழ் மற்றும் மேல் தட்டச்சு எழுத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https://theni.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட தொகுதி அளவிலான அலுவலர் கட்டிடம் - II, கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மேல் மாடி, தேனி - 625 531.விண்ணப்ப கட்டணம்: ஏதுமில்லை தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.06.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.06.2025

Post a Comment

0 Comments