ஜிப்மர் மருத்துவமனையில் 100 முதுநிலை மருத்துவர் பணி: விண்ணப்பிக்கலாம் வாங்க!

Follow Us

ஜிப்மர் மருத்துவமனையில் 100 முதுநிலை மருத்துவர் பணி: விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

ஜிப்மர் மருத்துவமனையில் 100 முதுநிலை உள்ளிருப்பு மருத்துவர் பணிக்கு ஆன்லைன் தேர்வு ஜூலை 27 ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                 


100 முதுநிலை உள்ளிருப்பு மருத்துவர் பணி

இதுகுறித்து ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனையில் 100 முதுநிலை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி கல்வி சாராத 3 ஆண்டுகள் பதவிக்கு தகுதியுள்ள இந்திய குடிமகன்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில் மயக்கவியல் தீவிர சிகிச்சை-13, உடற்கூறியல்-2, உயிர் வேதியியல்-4, பல் மருத்துவம்-2, தோல் மருத்துவம் 1, அவசர மருத்துவம் -3, இ.என்.டி.,-1, தடயவியல் மருத்துவம்-1, பொது மருத்துவம்-10, பொது அறுவை சிகிச்சை-12, முதியோர் மருத்துவம்-1, நுண்ணுயிரியல் -1 நியோனாட்டாலஜி-1 உட்பட 28 துறைகளில் 100 முது நிலை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட மருத்துவ பிரிவில் எம்.டி., எம்.எஸ்.,டி.என்.பி., எம்.டி.எஸ்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பதவிக்கு கணினி வழி தேர்வு சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, புதுச்சேரி ஆகிய 5 நகரங்களில் வரும் ஜூலை 27 ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்கள் www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் வருகிற ஜூலை 15ந் தேதி மாலை 4.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை ஜூலை 21ம் தேதி மாலை 6 மணிமுதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி பட்டியல் மற்றும் நேர்காணலுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல், நேர்காணல் நடைபெறும் தேதி உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும்.

புதுச்சேரி ஜிப்மரில் பணி அமர்த்தப்படும் முதுநிலை உள்ளிருப்பு மருத்துவர்கள் சில மாதங்கள் சுழற்சி முறையில் காரைக்கால் ஜிப்மரிலும் பணி அமர்த்தப்படுவார்கள். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments