கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பெண் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
விருப்பமும் தகுதியும் கொண்ட தேர்வர்கள், ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அவர் மேலும் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் (NGO) செயல்படுத்தப்படும் KGBV கொல்லப்பள்ளி, KGBV தளிகொத்தனூர், KGBV தேன்கனிக் கோட்டை, NSCBAV கக்கதாசம், NSCBAV தேன்கனிக் கோட்டை, NSCBAV அத்திமுகம் ஆகிய உண்டு உறைவிடப் பள்ளிகளில் பணிபுரிய தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பெண் ஆசிரியர்கள் தேவை.
நிபந்தனைகள் என்ன?
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை.
- உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி பணிபுரிய வேண்டும்.
- பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
- கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலைப் பட்டத்தில் பி.எட். மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேணடும்.
விண்ணப்பங்கள் அனைத்து சான்றுகள் (நகல்) மற்றும் அனுபவ சான்றுகளுடன் KGBV உண்டு உறைவிடப் பள்ளி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி ஓசுர் தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கு, 30.06.2025 அன்று மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
செல்: 9080470508, 7373152380
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கான இந்த ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments