ஏடிஎம் பிரச்சினைக்கு தீர்வு வந்தாச்சு.. இனி 100, 200 ரூபாய் நோட்டுகள் அதிகம் கிடைக்கும்!

ரூபாய் நோட்டுகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். பல்வேறு அறிவிப்புகளையும் விதிமுறைகளையும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.

இந்தியாவில் இப்போது 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் போன்ற நோட்டுகளுக்கு தடை செய்யப்படவில்லை. ஆனால் இந்த நோட்டுகள் பெரும்பாலும் புழக்கத்தில் இல்லை. 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன.

                                                                       


  


500 ரூபாய் நோட்டு!


இந்த நோட்டுகளில் 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் தான் ஏடிஎம்களில் கிடைக்கின்றன. ஆனால் அனைத்து ஏடிஎம்களிலும் இந்த ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. பல ஏடிஎம்களில் 500 ரூபாய் நோட்டுகள்தான் வருகின்றன. இது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ஏனெனில், வங்கிக் கணக்கில் 500 ரூபாய்க்கு குறைவாகவோ அல்லது 1000 ரூபாய்க்கு குறைவாகவோ பேலன்ஸ் இருந்தால் அவர்களால் எடுக்க முடியாமல் போகிறது.



பணம் எடுக்க முடியாது!


உதாரணமாக, ஒருவருடைய வங்கிக் கணக்கில் 400 ரூபாய் மட்டும்தான் பேலன்ஸ் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு ஒரு அவசர பணத் தேவை ஏற்படுகிறது. அப்போது அவர் அந்த 400 ரூபாயை எடுக்க ஏடிஎம் மையத்துக்குச் செல்கிறார். அங்கே அவர் 400 ரூபாய் எடுக்க முயற்சித்தால் அந்த ஏடிஎம்மில் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமெ இருக்கும்பட்சத்தில் அவரால் அந்த 400 ரூபாயை எடுக்கவே முடியாது. இது இக்கட்டான சூழலை ஏற்படுத்தும்.



சில்லறை பிரச்சினை!


ஒருவேளை 100 ரூபாய் நோட்டுகள் இருந்தால் நான்கு 100 ரூபாய் நோட்டுகள் வரும். 200 ரூபாய் நோட்டுகள் இருந்தால் இரண்டு 200 ரூபாய் நோட்டுகளோ அல்லது ஒரு 200 ரூபாய் மற்றும் இரண்டு 100 ரூபாய் நோட்டுகளாக வரும். ஆனால் 500 ரூபாய் நோட்டு மட்டுமே ஏடிஎம்மில் இருந்தால் அதை விடக் குறைவான தொகையை எடுக்க முடியாமல் போய்விடும். அதேபோல, ஒருவருடைய வங்கிக் கணக்கில் 900 ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரால் 500 ரூபாயை மட்டுமே எடுக்க முடியும். இதுபோன்ற சிரமங்களை சாமானிய மக்கள் அடிக்கடி சந்திக்கின்றனர்.



ரிசர்வ் வங்கி உத்தரவு!


இதுபோன்ற சூழலில், ஏடிஎம்களில் இருந்து பணம் எடுப்பது தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கியான உத்தரவை வழங்கியுள்ளது. மக்களுடைய பரிவர்த்தனைகளை எளிதாக்கவும், பணம் எடுப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்கவும் அனைத்து வங்கிகள் மற்றும் ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு கேசட்டில் இருந்து 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக ஒரு ஏடிஎம்மில் நான்கு கேசட்டுகள் இருக்கும். இதில் ஒரு கேசட்டிலாவது 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டும்.



மக்களுக்கு பெரிய நிவாரணம்!


மக்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டுகளை அணுகுவதை அதிகரிக்கும் முயற்சியாக அனைத்து வங்கிகளும் ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களும் தங்கள் ஏடிஎம்கள் ரூ. 100 மற்றும் ரூ. 200 மதிப்புள்ள நோட்டுகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவு சாமானிய மக்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏடிஎம்களில் இருந்து சிறிய மதிப்பு நோட்டுகள் வெளிவந்தால் சில்லறை பிரச்சினைகள் வெகுவாகக் குறையும்.



செப்டம்பர் 30 வரை டைம்!


ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 75 சதவீத ஏடிஎம்களில் குறைந்தது ஒரு கேசட்டில் 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், 2026ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் தேதிக்குள் 90 சதவீதஏடிஎம்களில் குறைந்தது ஒரு கேசட்டில் 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும். இதனுடன், 500 ரூபாய் நோட்டுகளும் இருக்கலாம்.

Post a Comment

0 Comments