10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மலேசியாவில் வேலை, ரூ.80,000 வரை சம்பளம் - ஜூன் 18 தமிழ்நாடு அரசு நடத்தும் நேர்காணல்!

 தமிழ்நாடு அரசு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

                                                                            


திறன் மேம்பாடு கழகம், தொழில்முனைவோர்களுக்கான புத்தாக்க நிறுவனம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவை மூலம் பல்துறைகளில் இருக்கு பணிகளுக்கான திறன்கள் ஏற்படுத்தப்பட்டு வேலை பெற்றுத் தரப்படுகிறது. இவைமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருக்கும் வேலைகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தரும் வகையில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்படுகிறது.


வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல வேண்டும் என பலருக்கு கனவு இருக்கும்? ஆனால் அதற்கு நம்பகனமாக ஆட்களை எப்படி அணுகுவது, அதற்கான விசா, வேலைக்கான அனுமதி ஆகியவற்றை பெறுவதில் ஏராளமான கேள்விகள், சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக சந்தையில் மோசடிக்காரர்கள் இருப்பதினால், கனவு இருந்தாலும், சிக்கல்களில் மாற்றிக்கொள்ள விரும்பாமல் பலர் அதற்கான முயற்சிகளை எடுப்பது இல்லை.


இந்த சூழ்நிலை தவிர்த்து, தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு பாலமாக உதவுகிறது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ்னம். ஆசியா, ஐரோப்பிய ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு துறை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு நேரடியாக ஆட்கள் தேர்வு செய்து, பணி வாய்ப்பை வழங்கி தருகின்றது.


மலேசியாவில் வேலை


அந்த வகையில், தற்போது மலேசியாவில் பணிபுரிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் B.E/B.Tech படித்தவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

Qc Inspector, Piping Engineer, Planning engineer, Tendering Engineer, Piping Foreman, Pipe Fitter, TIG & ARC Welder CS ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் நிரப்பப்படுகின்றனர்.

தகுதிகள் என்ன?


மேல் குறிப்பிட்டப்படி, 10-ம் வகுப்பு முடித்தவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து மூன்று முதல் 5 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 24 முதல் அதிகபடியாக 42 வயது வரை இருக்கலாம்.

சம்பள விவரம்


Qc Inspector பதவிக்கு மாதம் ரூ.70,000 முதல் 80,000 வரை வழங்கப்படும்.

Piping Engineer பதவிக்கு மாதம் ரூ. 60,000 முதல் 80,000 வரை வழங்கப்படும்.

Planning engineer பதவிக்கு மாதம் ரூ. 70,000 முதல் 84,000 வரை வழங்கப்படும்.

Tendering Engineer பதவிக்கு மாதம் ரூ.70,000 முதல் ரூ.76,000 வரை வழங்கப்படும்.

Piping Foreman பதவிக்கு மாதம் ரூ.54,000 முதல் ரூ.62,400 வரை வழங்கப்படும்.

TIG & ARC Welder CS பதவிகு மாதம் ரூ.42,000 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படும்.

விசா, உணவு, இருப்பிடம்

வேலைநாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய தேவையாக இருக்கும் விசா, உணவு மற்றும் தங்கும் வசதி ஆகிய அனைத்தும் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.


இப்பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூன் 18-ம் தேதி நேர்காணல்

இப்பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய 18.06.2025 அன்று காலை 9 மணி முதல் சென்னையில் நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அவர்களின் சுயவிவரங்கள் அடங்கிய படிவம், பாஸ்போர்ட், போட்டோ ஆகியவற்றை எடுத்துகொண்டு நேரில் செல்ல வேண்டும்


நேர்காணல் நடைபெறும் இடம்

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்,

ஒருங்கிணைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,

42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை,

கிண்டி, சென்னை - 32.


கூடுதல் விவரங்களுக்கு https://omcmanpower.tn.gov.in/ என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் 044 - 22502267 என்ற தொலைபேசி எண் மற்றும் 9566239685 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post