நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
நில அளவை செய்வதற்கு தாசில்தார் ஆபீசுக்கு சென்று, உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் நிலைமை இருந்தது.. இதனால், தாமதம், கையூட்டு போன்ற சலசலப்புகளும் எழுந்தன. ஆனால், இந்த மொத்த சிக்கலையும் தீர்க்க இணையவழி சேவைகளை அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவிடுவதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதற்காக httstamilnilam.tn.gw.incitizen என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதலமைச்சரால் 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணைய வழியிலேயே செலுத்தலாம். நில அளவரால் பதிவேற்றம் தற்போது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொதுசேவை மையங்கள் (இ-சேவை) மூலமாக விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அழைப்பு மூலம் தெரிவிக்கப்படும். நிலஅளவை செய்யப்பட்ட பின் மனுதாரர் மற்றும் நிலஅளவர் கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம் நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் hts eservicestngwin என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
0 Comments