திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 354 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டதாரி அப்ரெண்டீஸ், டெக்னிக்கல் அப்ரெண்டீஸ், ஐடிஐ அப்ரெண்டீஸ் ஆகிய பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும்? எப்படி விண்ணப்பிப்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று திருச்சி பெல் நிறுவனம். பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. நாடு முழுக்க பல்வேறு நகரங்களில் பெல் நிறுவனம் உள்ளது. தமிழகத்தில் திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ளது. கனரக மின் சாதனங்கள் உள்ளிட்டவை இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
பெல் நிறுவனத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது 354 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
பட்டதாரி அப்ரெண்டீஸ் - 80
டெக்னிக்கல் அப்ரெண்டீஸ் - 57
ஐடிஐ அப்ரெண்டீஸ் - 217
கல்வித் தகுதி:
பட்டதாரி அப்ரெண்டீஸ் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இன்ஜினியரிங் பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். 60 மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்கள் அவசியம். 2020 முதல் 2024 வரையிலான ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
டிரேடு அப்ரெண்டீஸ் பணிக்கு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஃபிட்டர், வெல்டர், டர்னர், மெஷினிஸ்ட் ஆகிய பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு?
பட்டதாரி அப்ரெண்டீஸ் - 12,000
டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் - 11,000
டிரேடு அப்ரெண்டீஸ் - 11,050
ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்து தெரிந்து கொள்வது அவசியம்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தேர்வர்கள் https://nats.education.gov.in/ என்ற இணியதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://trichy.bhel.com/tms/app_pro/Graduate%20Apprentice_2025(Batch3).pdf
0 Comments