தமிழக அரசு, தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான இலவச பயிற்சி அளிக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
Aari Embroidery and Hand Printing on Textiles : தமிழக அரசு சார்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தனியார் நிறுவனங்களோடு இணைந்து மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
இது மட்டுமில்லாமல் சொந்த தொழில் செய்பவர்களுக்காக பல்வேறு பயிற்சி வகுப்பும் இலவசமாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்தல், பேக்கரி உணவு பொருட்கள் தயாரித்தல் என பயிற்சியை அளித்தது.
டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி பயிற்சி
இந்த நிலையில் டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சி வகுப்பானது நடைபெறவுள்ளது. அதன் படி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகாடமி (Vivacious Academy ) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்
ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடச்சியாக தற்போது சென்னை வேளச்சேரியில் உள்ள விவேஷியஸ் அகாடமி (Vivacious Academy) நிறுவனம் மற்றும் தாட்கோ இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரி எம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் (Diploma in Aari Embroidery and Hand Printing On Textiles) வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்கான கால அளவு 30 நாட்கள் ஆகும். மேலும் சென்னை வேளச்சேரியில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய தேசிய NSDI (National Skill Development of India) அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். தங்கும் விடுதி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்கள்.
0 Comments