கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாட்டில் உள்ள கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை.
மாவட்ட தொழில்மையம், ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.50,000 மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியான திருநங்கைகள் உரிய ஆவணங்களுடன் https://tg.tnsw.in என்ற இணையதளத்திலும், ஆதரவற்ற பெண்கள், விதவைகள் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆதரவற்ற பெண்கள், விதவைகள் ஆகியோர் தமிழக அரசின் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.tnwidowwelfareboard.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். உங்கள் செல்போன் எண்ணை பதிவு செய்தால் உங்களுக்கு OTP வரும் அதன்வாயிலாக நீங்கள் பதிவு செய்துக்கொண்டு அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்
.jpg)
0 Comments