கோவை மாவட்டம் பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்ளுக்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு படித்தவர்கள், எழுத படிக்க தெரிந்தவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
பதவிகள் :
இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனை எழுத்தர், பதிவறை எழுத்தர், துப்புரவு பணியாளர்
காலிப்பணியிடங்கள் :
5 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி :
இளநிலை உதவியாளர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
சீட்டு விற்பனை எழுத்தர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
பதிவறை எழுத்தர் - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
துப்புரவு பணியாளர் - தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்
சம்பளம் :
இளநிலை உதவியாளர் - Level 22 18500 58600
சீட்டு விற்பனை எழுத்தர் - Level 22 18500 58600
பதிவறை எழுத்தர் - ஊதியம் 15900 - 50400
துப்புரவு பணியாளர் - ஊதியம் 10000 -31500
தேர்வு செய்யும் முறை:
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்
விண்ணப்பிக்கும் முறை : |
தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 03.01.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
NOTIFICATION-- CLICK HERE
WEBSITE - CLICK HERE
0 Comments