8 வது முடித்த ஆண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 – 380+காலிப்பணியிடங்கள்…!

 

8 வது முடித்த ஆண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2022 – 380+காலிப்பணியிடங்கள்…!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Record Clerk , Assistant மற்றும் Security & Watchman பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 18.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNCSC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Record Clerk, Assistant மற்றும் Security & Watchman பணிக்கென 381 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Record Clerk – 156 பணியிடங்கள்
Assistant – 99 பணியிடங்கள்
Security & Watchman – 126 பணியிடங்கள்

TNCSC கல்வி தகுதி:

Record Clerk – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc in Botany, Zoology, Chemistry, Physics, Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Security & Watchman – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNCSC வயது வரம்பு:

8-02-2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNCSC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Record Clerk – ரூ. 5,285/-

Assistant, Security & Watchman – ரூ.5,218/-

TNCSC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNCSC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments