இந்திய அஞ்சல் துறையில் வேலை – சம்பளம்: ரூ.34800/- || தேர்வு, நேர்காணல் கிடையாது
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Technical Supervisor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 29 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பதவிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்திய அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:
- உதவி மேலாளர் – 23
- தொழில்நுட்ப மேற்பார்வையாளர் – 6
வயது வரம்பு:
மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அஞ்சல் துறை கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Science துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அஞ்சல் துறை மாத சம்பளம்:
மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் Level-7 ன் ஊதிய விவர படி, மாதம் ரூ.9300-34800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவைர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 05.12.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments