தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை 2021 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை 2021 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் (TNCSC) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவண்ணாமலை மாவட்ட மண்டலத்தில் Record Clerk, Security/ Watchman ஆகிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வயது வரம்பு :
  • விண்ணப்பிப்போர் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
TNCSC கல்வித்தகுதி :
  • பருவகால பட்டியல் எழுத்தர் (Record Clerk) – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பருவகால காவலர் (Security/ Watchman) – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
TNCSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  • பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
  • பருவகால காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
தேர்வு செயல்முறை :

இந்த அரசு பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்கணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

PERAMBALUR NOTIFICATION

TRICHY NOTIFICATION

DINDUGAL NOTIFICATION

Post a Comment

0 Comments