இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெரும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தத் திட்டங்களில் அரசு சார்பில் மானியமும் வழங்கப்படுகின்றது. அதன்படி வீடுகளில் சூரிய மின்சக்தி மேற்கூறையை நிறுவுவதற்கு மத்திய அரசு 30000 ரூபாய் மானியத்துடன் கூடுதலாக 20000 ரூபாய் மாநில அரசின் மூலதன ஊக்க தொகையும் வழங்கப்படுகின்றது.
இதனால் ஒரு கிலோ வாட் சோலார் மேற்கூரை நிறுவும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் பயனாளி 50000 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைப்பு உள்ள உள்நாட்டு நுகர்வோர்கள் மட்டுமே இதற்கு தகுதியானவர்கள் ஆவர். தேசிய சோலார் போர்ட்டலில் பதிவு செய்து TANGEDCO என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த இந்த சலுகையை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments