ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை..!! உடனே விண்ணப்பிங்க..

Follow Us

ஆயுர்வேத மருத்துவம் படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை..!! உடனே விண்ணப்பிங்க..

 தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் மருத்துவத் துறையில் காலியாக உள்ள ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி (Assistant Medical Officer - Ayurveda) பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகளின் கீழ் இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

                                                                            


பணியிட விவரம்:


உதவி மருத்துவ அதிகாரி (ஆயுர்வேதம்) 8


வயது வரம்பு: அதிகபடியாக 37 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம் பிரிவினருக்கு அதிகபடியான வயது வரம்பு கிடையாது.


கல்வித்தகுதி:


* அங்கீகரிக்கப்பட்ட ஆயுர்வேதத்தில் HPIM அல்லது GCIM அலல்து L.I.M அல்லது B.A.M.S ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.


* இந்திய மருத்துவத்திற்கான இந்திய வாரியம் அல்லது தமிழ்நாடு வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.


சம்பளம்: ஆயுர்வேத மருத்துவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிலை 22 கீழ் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை:


* இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் எதுவும் நடத்தப்படாது.


* எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு விவரங்கள்


தமிழ் மொழித் தாள்


10-ஆம் வகுப்பு தரத்தில் நடைபெறும்.

50 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம்.

40% மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தை முதன்மையாக கொண்ட தாள்


100 மதிப்பெண்களுக்கு, 2 மணி நேரம்.

தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 35% மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு 30% போதுமானது.

தாள் ஆங்கிலத்தில் மட்டுமே அமையும்.

நெகட்டிவ் மார்க் இல்லை.

தேர்வு சென்னையில் கணினி வழி நடைபெறும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்படும். தகுதி பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணியிடங்கள் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் டிஏபி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.


கடைசி தேதி: செப்டம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments