TABCEDCO துவக்கிய புதிய வாய்ப்பு - பால் பண்ணை தொடங்க கறவை மாடுகளுக்கு ரூ.1.20 லட்சம் கடன்!
தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) , பால் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இந்நூல்திட்டத்தின் கீழ் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 வரை கடன் பெறலாம்.
முக்கிய அம்சங்கள்:
திட்டம் வழங்குபவர்கள்: TABCEDCO, AAVIN / மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம்
கடன் தொகை: ஒரு மாடுக்கு ₹60,000, அதிகபட்சம் 2 மாடுகள் - ₹1,20,000 வரை
கடன் திருப்பிச் செலுத்தும் காலம்: 3 ஆண்டுகள்
வட்டி விகிதம்: வருடத்திற்கு 7% (பயனாளி பங்கு 5% மட்டுமே)
தகுதி விவரங்கள்:
வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை
வருமான வரம்பு: ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஆகியிருக்க வேண்டும்
ஒரு குடும்பத்திலிருந்து ஒருவருக்கே கடன் வழங்கப்படும்
தேவையான ஆவணங்கள்:
சாதி சான்றிதழ்
வருமானச் சான்றிதழ்
பிறப்பிடச் சான்றிதழ்
பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் சான்று
விண்ணப்பிக்கும் முறை:
பயனாளிகள் தங்கள் மாவட்ட ஆவின் சங்கத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்
சான்றிதழ்கள் மற்றும் அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
0 Comments