Teacher : ஆசிரியர்களே ரெடியா.! காலிப்பணியிடம் நிரப்ப போறாங்க- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Follow Us

Teacher : ஆசிரியர்களே ரெடியா.! காலிப்பணியிடம் நிரப்ப போறாங்க- உடனே விண்ணப்பிக்க அழைப்பு

 ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

                                                                          


இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

5 பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு அருகிலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் தகுந்த கல்வித் தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் ஆக இருக்க வேண்டும். ஊதியமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 வழங்கப்படும். மாதத் தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள் உடனுடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், 2025 ஜூன் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் கலோன் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments