நீலகிரி மாவட்டத்தில் காத்திருக்கும் அரசு வேலை! யாரெல்லாம் சேரலாம் தெரியுமா?

 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின்படி நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் 2 சமூக பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீலகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

                                                                              


என்ன பணியிடம், யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.காலியிடங்கள்குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.தகுதி :விண்ணப்பதாரர் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகம் புயல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றும் குழந்தைகள் தொடர்பான உடல்நலம் கல்வி அல்லது குழந்தைகளுக்கான நல பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் ஆகவும் இருத்தல் வேண்டும்.(அல்லது)குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித உடல் நலம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.வயதுவரம்பு:இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு குறையாதவராகவும் 65 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.


ஊதியம் :


இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 ஊதியமாக வழங்கப்படும்.எப்படி விண்ணப்பிப்பது?இந்த பணியழங்களுக்கான விண்ணப்ப படிவத்தை நீலகிரிமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரி https://dsdcpimms.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவண நகல்களை சுயசான்றுப்போம் இட்டு 13.6.2025 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இங்கே கிளிக் செய்து படித்துக்கொள்ளவும்.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:இயக்குனர்,குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை,30 புரசைவாக்கம் நெடுஞ்சாலை,கெல்லீஸ்,சென்னை -10.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலம் கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும் இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.குறிப்பு:


தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் குழந்தைகள் நலக் குழுவின் தலைவராகவோ அல்லது உறுப்பினராகவோ நியமனம் செய்யப்பட மாட்டாது .

தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

இப்பணி அரசு பணி அல்ல.

Post a Comment

0 Comments