தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது. நகைக்கடன் வாங்குவோர், நகைக்கான உரிமையாளர் நான் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெறுவது அவசியம் எனவும் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் தான் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.
மேலும், இந்த புதிய விதிகள் அடுத்தாண்டு, அதாவது 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என சொல்லப்பட்டது. ஆனால், ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடால், மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடிதமும் எழுதப்பட்டது.
இந்நிலையில் தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, தங்க நகைக்கடன் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில், "தங்க நகைக்கடன் தொடர்பாக தற்போது வெளியிடப்பட்டது நகல் விதிமுறைகள் தான் என்றும் மக்களின் ஆலோசனைகளை பரிசீலித்த பிறகே விதிமுறைகள் இறுதி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
0 Comments