குட் நியூஸ்.. வங்கியில் இனி மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க தேவையில்ல!

 இந்தியா முழுவதும் அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளிலும் சேமிப்புக் கணக்கின் வகையைப் பொறுத்து, வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டும்.

                                                                              


வங்கி வாடிக்கையாளர் குறைந்தபட்ச சராசரி இருப்புத் தேவையைப் பராமரிக்கத் தவறினால் வங்கியால் அபராதம் விதிக்கப்படும்.


ஆனால் தற்போது கனரா வங்கி சேமிப்பு வங்கிக் கணக்கு பயனரும் இப்போது அனைத்து சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது.சராசரி மாதாந்திர இருப்பு தேவை கிளை இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும்.

வங்கி வாடிக்கையாளர்கள் நகர்ப்புற மற்றும் பெருநகர கிளைகளுக்கு ரூ.2,000, அரை நகர்ப்புற கிளைகளுக்கு ரூ.1,000 மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு ரூ.500 AMB இதுவரை பராமரிக்க வேண்டியிருந்தது. தற்போது சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments