Follow Us

மாதம் மாதம் இஎம்ஐ கட்டுறவங்களுக்கு.. அடித்தது ஜாக்பாட்.. வட்டி குறைய போகுது.. ஆர்பிஐ அசத்தல் முடிவு!

 

ஜூன் 6ம் தேதி ரெப்போ விகிதத்தை குறைக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது இதன் மூலம் மூன்றாவது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் நாம் கட்டும் வீட்டு லோன் உள்ளிட்ட பல கடன்களின் வட்டி குறையும்.

                                                                            


ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும்.


ஏற்கனவே இரண்டு முறை இந்த வருடம் குறைக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் 3வது முறையாக ரேட் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ரெப்போ ஏன் முக்கியம்?


ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.


ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான். ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.


இந்த முறை எவ்வளவு குறையும்?


இந்த முறை 25-50 பிபிஎஸ் புள்ளிகளை அடுத்த மாதம் குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே வருடத்தில் மூன்றாவது முறையாக அடுத்த மாதம் ரெப்போ ரேட்டை குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


மொத்தமாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தற்போதைய நிதி ஆண்டிலேயே ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) குறைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி, கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் சமீபத்தில் ரெப்போ விகிதத்தை இரண்டு முறை தலா 25 பிபிஎஸ் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த ரெப்போ விகிதம் தற்போது 6 சதவீதமாக உள்ளது.


அடுத்த கட்டமாக 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 பிபிஎஸ் புள்ளிகளை குறைக்க ஆர்பிஐ திட்டமிட்டு உள்ளது. ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் 25 பிபிஎஸ் குறைக்கப்படும் என்று ஆர்பிஐ பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.


அது என்ன ரெப்போ விகிதம்


கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.50%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது


பொதுவாக ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி வங்கிதான் முடிவு எடுக்கும். அதாவது உங்களிடம் கேள்வி கேட்காமல் அவர்கள் முடிவு எடுத்து உங்களிடம் தெரிவிப்பார்கள். லோன் எடுத்தவர்களுக்கு இதில் குரல் எதுவும் கிடையாது. அவர்கள் முடிவு எதையும் எடுக்க முடியாது. அதன்படி இனிமேல், உங்களது ஒப்புதல் இல்லாமல் இதில் மாற்றங்களை செய்ய முடியாது. வீட்டுக்கடன் காலத்தை அல்லது EMI ஐ வங்கிகள் மாற்ற முடியாது. இதில் வங்கிகள் - லோன் வாங்கியவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.



எப்படி வட்டி குறையும்?


அதேபோல் வீட்டுக்கடன் காலத்தை உயர்த்த வேண்டும் என்று உங்களை வங்கிகள் வறுபுறுத்த முடியாது. அதேபோல் EMI ஐ வங்கிகள் மாற்றுவதை பற்றியும் வங்கிகள் பிரஷர் கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லும் முடிவையே இனி வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதாவது ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்த்த விரும்பினால் உயர்த்திக்கொள்ளலாம். இஎம்ஐ காலத்தை உயர்த்த விரும்பினால் அதை உயர்த்திக்கொள்ளலாம்.


ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டு முறை ரெப்போ குறைக்கப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது.

Post a Comment

0 Comments