ஒரு முறை பணத்தை டெபாசிட் செய்தால் போதும்... ஆயுள் முழுவது பென்சம் வரும்... எல்.ஐ.சியின் ஸ்மார்ட் பென்சன் திட்டம் பற்றி தெரியுமா?

Follow Us

ஒரு முறை பணத்தை டெபாசிட் செய்தால் போதும்... ஆயுள் முழுவது பென்சம் வரும்... எல்.ஐ.சியின் ஸ்மார்ட் பென்சன் திட்டம் பற்றி தெரியுமா?

 இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் LIC சமீபத்தில் வெளியிட்ட முக்கியமான பென்சன் திட்டத்தில் இந்த ஸ்மர்ட் பென்சன் திட்டம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

                                                                           


அதிலும் பொதுவாக மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் இந்த திட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்த பென்சன் திட்டத்தில் தனிநபர் பென்சன் பெறலாம், அவர் இறந்த பிறகு அவரை சார்ந்து இருக்கும் அவரின் மனைவியும் பென்சன் பெறலாம். இந்த திட்டத்தில் ஒருமுறை பணத்தை நீங்கள் டெபாசி செய்து விட்டால் , மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரம் என நீங்கள் தேர்வு செய்யும் விருப்பத்தை பொறுத்து பென்சன் வந்து சேரும். இந்தத் திட்டத்தில் பல்வேறு ஓய்வூதிய விருப்பங்கள் மற்றும் தேவைப்பட்டால் கடன் வாங்கும் வசதியும் உள்ளது.


பென்சன் கிடைக்காத தனியார் ஊழியர்களுக்கு இந்த எல்ஐசியின் ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டம் ஒரு நல்ல தேர்வாக அமையும்.தகுதி: 18 வயது முதல் 100 வயது வரை உள்ள எவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் இரண்டு வகையான பென்சன் பிளான்கள் உள்ளன.ஒற்றை ஆயுள் வருடாந்திரம் : இதில், பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரை மட்டுமே ஓய்வூதியம் பெறுவார். கூட்டு ஆயுள் வருடாந்திரம் : இதில், பாலிசிதாரருடன் சேர்ந்து, அவரது மனைவியும் ஓய்வூதியம் பெறுகிறார்.இந்த திட்டத்தில் ரூ 1 லட்சம் முதல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நீங்கள் டெபாசிட் செய்யலாம். அந்த அளவை பொறுத்து பென்சன் தொகை மாறுபடும்.


டெபாசிட் செய்வதற்கான தொகையில் எந்த உச்ச வரம்பும் இல்லை. உதாரணமாக நீங்கல் ரூ. 1 லட்சம் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மாதத்திற்கு - ரூ. 1,000 அல்லது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் - ரூ.


3,000 அல்லது ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் - ரூ. 6,000 அல்லது ஒரு வருடத்திற்கு - ரூ. 12,000 பெறலாம். உங்கள் விருப்படி எப்படி வேண்டுமானாலும் பென்சன் பெறலாம் கடன் வசதி: பாலிசி வழங்கப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அல்லது ஃப்ரீ-லுக் காலம் முடிந்த பிறகு கடனைப் பெறலாம். ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இரண்டிலும் இந்த திட்டத்தில் இனைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் தகவல் அருகில் இருக்கும் எல்.ஐ.சி ஆபீஸ் அல்லது எல்.ஐ.சி முகவரை அணுகவும்.

Post a Comment

0 Comments