இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.. 58 ஆயிரம் சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

Follow Us

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை.. 58 ஆயிரம் சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

 தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு கோயில்களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் 17 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                                                                            



பணியிடங்கள் விவரம்:


சீட்டு விற்பனையாளர் – 01


காவலர் – 02


கூர்க்கா – 01


ஏவலர் – 01


சலவை தொழிலாளர் – 01


திருவலகு- 03


பெருக்குபவர் – 05


உப கோயில் எழுத்தர் – 01


ஓதுவார் – 01


உபகோயில் மேளம் குழு – 01


கல்வி தகுதி:


* சீட்டு விற்பனையாளர், உப கோயில் எழுத்தர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும்.


* காவலர், கூர்கா, ஏவலர், சலவை தொழிலாளர், திருவலகு, பெருக்குபவர், ஓதுவார் ஆகிய பணியிடங்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.


* உபகோயில் மேளம் குழு: தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். சமய நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட இசைத்துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


* இந்து மதத்தை சேர்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.


வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.


சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 58 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள் மிகு வனபத்ரகாளியம்மன் கோயில், தேக்கம்ப்பட்டி, நெல்லித்துறை அஞ்சல், மேட்டுப்பாளையம் வட்டம், கோவை மாவட்டம், 641 301.

Post a Comment

0 Comments