பட்டா விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் புதிய முறையை அரசு பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது பொது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
30 நாட்களுக்குள் பட்டா:
இந்த நிலையில் நிலம் தொடர்பான உட்பிரிவு செய்ய வேண்டிய சொத்துகளை இ-சேவை மையம் மூலமோ அல்லது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்கிற இணையத்தளம் மூலம் நேரடியாக விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உட்பிரிவு தேவையற்ற பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய முறை எப்படி:
இது குறித்து தமிழ்நாடு அரசின் நில அளவைத்துறை இயக்குனர் மதுசூதன் ரெட்டி கூறும்போது, ‘தமிழக அரசின் உத்தரவுப்படி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படுகிறது. சில சொத்துகளில் வில்லங்கம் மற்றும் கோர்ட்டில் வழக்கு இருந்தால் மட்டுமே அதில் தாமதம் ஏற்படும். அதேபோல் பட்டா மனுக்கள் மீதும் வரிசையாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த காலதாமதமும் கிடையாது, அப்படி காலதாமதம் செய்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
பட்டா வாங்க படும் பாடு:
நமது சொந்த நிலத்திற்கு பட்டா வாங்குவது என்பது கடந்த காலங்களில் மிகவும் சிரமமாக இருந்து வந்தது. இதனால் அரசு அதிகாரிகள் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வந்தது,
இதனை குறைக்கும் வகையில் தமிழக அரசு பட்டா, சிட்டா போன்றவற்றை ஆன்லைனில் கொண்டுவந்து நிலங்கள், பட்டா வாங்குவதற்கான வழிகளை மிகவும் எளிமைப்படுத்தி உள்ளது. இதுமட்டுமில்லாமல் நிலம், உட்பிரிவு செய்ய வேண்டியது இல்லாத சொத்துக்களுக்கு ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்தவுடன் ஒரு நிமிட பட்டா என்கிற உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது ஆனால் அதில் நிலத்தை விற்பவர் பெயரில் பட்டா இருக்க வேண்டும். அதனால் சொத்தை வாங்குபவர்கள் நிலம்/சொத்தானது விற்பவரின் பெயரில் பட்டாவானது இருப்பது என்பதை உறுதி செய்ய வேண்டும் என பத்திரப்பதிவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8,40,913 பட்டாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பழைய முறையில் எப்படி?
முன்பு எல்லாம் சர்வேயர்கல் மாதத்திற்கு 30 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 80 என்கிற அளவில் வேகமாக நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அதிகாரிகள் சுணக்கமாக செயல்படுவதால பல இடங்களில் பட்டா தாமதமாக வருவதாகவும் பொதுமக்களிடம் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பொதுமக்கள் விண்ணப்பம் செய்த தேதியின் அடிப்படையில் சர்வேயர் அதை வரிசை வாரியாகத்தாக ஆய்வு செய்ய வேண்டும் என அரசு கொண்டுள்ள இந்த புதிய செயல்பாட்டால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments