எளிய மக்கள், பெண்கள் என அனைவருக்கும் ஏற்ற விதமான பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதான் மந்திரி சம்மான் நிதி திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியது.
பிஎம் கிசான் என அறியப்படும் இந்த திட்டத்தின் வாயிலாக நலிவடைந்த விவாசயிகளுக்கு ஆண்டும் ரூ. 6000 வழங்கப்படுகிறது. ரூ. 2000 என மூன்று தவணைகளாக இந்த தொகை விவாசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவது பிஎம் கிசான் திட்டத்தின் சிறப்பம்சமாக உள்ளது.
பிஎம் கிசான் 19 தவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இதனையடுத்து 20 வது தவணைக்காக விவசாயிகள் காத்திருப்பில் உள்ளனர். இன்று இந்த தவணை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னமும் இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் 20வது தவணை விரைவிலே வெளியிடப்படலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் சில விவசாயிகளுக்கு இந்த தவணை கிடைக்காது என கூறப்படுகிறது. அவர்கள் யார் யாரென தற்போது விரிவாக பார்க்கலாம்.
குறிப்பாக இகேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யாத விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் பலனை பெற முடியாது. eKYC நிறைவு செய்யாத பயனாளர்கள் உடனடியாக இதனை பூர்த்தி செய்யவும். ஆன்லைனிலே இகேஒய்சியை எளிமையான முறையில் செய்து முடிக்கலாம். அதன்படி pmkisan.gov.in போர்டலில் ஆதார் எண், மொபைல் ஓடிபியை நிரப்பி eKYC செயல்முறையை நிறைவு செய்யலாம். மேலும், CSC மையத்துக்கு சென்று கைரேகை மூலமாக eKYC யை செய்து முடிக்கலாம்.
பிஎம் கிசான் திட்டத்தின் பலனை முழுமையாக பெறுதற்கு நில சரிபார்ப்பு செய்ய வேண்டியது அவசியம். சமீபத்தில் நிலப்பதிவுகள் புதுப்பிக்கப்பட்டு இருந்தால், அதனை அப்டேட் செய்ய வேண்டும். இல்லையென்றால் 20வது தவணையை பெற முடியாது. மேலும், பயனாளர்கள் விவசாயிகள் ஐடி வைத்திருக்க வேண்டியது அவசியம். பிஎம் கிசான் இணையத்தளத்துக்கு சென்று விவசாயி ஐடியை பதிவு செய்து பெறலாம்.
ஆதார் எண்ணை விவசாயிகள் வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்தாலும் பணம் வருவதில் சிக்கலை எதிர்கொள்ளலாம். பயனாளர் வங்கி கணக்கு எண், IFCS நம்பர், ஆதார் தகவல்களில் பிழை ஏதேனும் இருந்தால் அதனை சரிசெய்ய வேண்டும். ஆதார் எண், வங்கி கணக்கு, நில சரிபார்ப்பு போன்ற அடிப்படை தகவல்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம். பிழைகளை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்.
அத்துடன் தகுதி இல்லாத பயனாளர்களுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் பலன் கிடைக்காது. வருமான வரி செலுத்தும் நபர்கள், அரசு ஊழியர்கள், 10,000 ரூபாய்க்கும் அதிகமாக ஒய்வூதியம் பெறுபவர்கள், நிறுவன நில உரிமையாளர்கள், பெரிய விவசாயிகள் போன்றவர்கள் பிஎம் கிசான் திட்டத்தின் பலனை பெற முடியாது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பலன் பெறுவதற்கு 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலத்தை விவசாயிகள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
பிஎம் கிசான் திட்டத்தின் பலன் உங்களுக்கு கிடைக்குமா என்பதை ஆன்லைனிலே சரிபார்க்கலாம். இதற்கு https://pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் 'farmers corner' என்ற பிரிவில் 'Beneficiary List' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் பயனாளர் தங்களின் மாவட்டம், தாலுகா, மாநிலம் மற்றும் பதிவு எண் அல்லது ஆதார் எண்ணை உள்ளிட்டு Get Report என்பதை கிளிக் செய்யவும். இதன் மூலமாக பிஎம் கிசான் திட்டத்தின் பலன் உங்களுக்கு கிடைக்குமா, இல்லையா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
பிஎம் கிசான் திட்டத்தில் போலியான விவசாயிகள் பலன் பெறுவதை தடுக்கும் விதமாக அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. இந்தியாவில் சிறு குறு விவசாயிகளுக்கு மிகப்பெரிய பலனளிக்கும் விதமாக இத்திட்டம் உள்ளது. இதனால் தகுதியான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தில் பலன் பெறுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments