10 ஆவது படித்தவர்களுக்கு மாதம் ரூ.38,500 ஊதியம்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

 பெங்களூருவில் அமைந்துள்ள மத்திய அறிவியல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிஎஸ்ஐஆர் தேசிய ஏரோ ஸ்பேஸ் ஆய்வகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

                                                                                  


என்னென்ன பணியிடங்கள் காலியாக உள்ளன என்ன பணிக்கு என்ன தகுதி வேண்டும் உள்ளதை அனைத்து தகவல்களையும் இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். காலி பணியிடம் டெக்னீசியன் -1காலிபணியிட விபரங்கள் UR-30, OBC-27,EWS-08,SC-15, ST-06ESM - 08, Sports - 04 PwBD:06என மொத்தம் 104 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.ஊதியம்: இந்தப் பணியில் சேரும் நபர்களுக்கு ரூ.19000 முதல் 63,200 வரை அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். மாதத்திற்கு சுமார் 38,500 ரூபாய் ஆரம்ப சம்பளமாக கைகளில் கிடைக்கும்.வயதுவரம்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தொடர்புகள் பொருந்தும். பழங்குடியினர் மற்றும் பட்டியல் இன மக்களுக்கு ஐந்து ஆண்டுகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் தளர்வுகள் வழங்கப்படும். விளையாட்டு துறையின் கூட்டாது சேரும் நபர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படும். கல்வி தகுதி:அடிப்படை தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றெடுக்க வேண்டும்

அறிவியல் பாடங்களில் குறைந்தபட்சம் 55 % மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ITI சான்றிதழ் அல்லது தேசிய / மாநில வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி டெக்னீசியன் பிரிவில் ஃபிட்டர் வெல்டர் டர்னர் எலக்ட்ரிக்கல் டிரேட் மெக்கானிக் இன்ஸ்டுமெண்ட் மெக்கானிக் ,பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் உள்ளன ஒவ்வொருவருக்கும் தனித்தனி தகுதிகள் வழங்கப்பட்டுள்ளன இதை அதிகாரப்பூர்வை இணையதளத்தில் விரிவாக படித்துக் கொள்ளலாம்.தேர்வு முறை


விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு முதலில் வர்த்தக தேர்விற்கு அழைக்கப்படுவர்.

அதில் தேர்வாகும் நபர்கள் எழுத தேர்வை எழுத வேண்டும்.

எழுத்து தேர்வு ஆனது மூன்று தாள்களைக் கொண்ட தேர்வாக அமையும்.

அதன் பெரும் மதிப்பெண்களின் அடிப்படையில் டெக்னீசியனாக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nal.res.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.முக்கிய தேதிகள்:விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.06.2025விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2025

Post a Comment

Previous Post Next Post