10th Result Link: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு - இதுதான் லிங்க்..

 பள்ளி பருவத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு என்பது முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. பள்ளியில் முதன்முதலாக பொதுத்தேர்வு என்ற பெரிய அளவிலான தேர்வு சந்திக்கும் இடமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தான் அமைகிறது.

                                                                   


வாழ்க்கையில் என்ன படிக்க வேண்டும்? அதற்கு எது தேவை? எந்த படிப்புகளை தேர்வு செய்வது? பத்தாம் வகுப்பை முடித்த பிறகு 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் என்ன படித்தால் கல்லூரியில் நமக்கு பிடித்த பாடத்தை படிக்க முடியும்?


பிடித்த வேலைக்கு எந்த படிப்பு எந்த குரூப் சரியாக இருக்கும்? என்று தேர்வு செய்யும் கட்டமாக இது அமையும். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரும் மதிப்பெண்களின் அடிப்படை இலையே 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான குரூப்பை தேர்வு செய்ய இயலும். அந்த வகையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு என்பது முதல் மைல் கல்லாக அமைந்திருக்கும்.


2024-25 ஆண்டில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வியின் கீழ் உள்ள பாடத்திட்டத்தை பின்பற்றிய அனைத்து அரசு, அரசு சார்ந்த, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை மே 16 2025 காலை 9 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது. முன்னதாக மே 19 2025 அன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்வு முடிவு நாள் முன்கூட்டி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்று நாட்களுக்கு முன்னதாக மே 16 அன்று வெளியிட இருக்கிறது. இதே நாளில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகளும் வெளியாக இருக்கின்றன.


மே 16 2025 காலை 9 மணிக்கு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகியவற்றில் மாணவர்கள் தங்களது பதிவின் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு தங்களது மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது மாணவர்கள் படித்த பள்ளிகளில் இருந்தும் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இதுபோக மத்திய அரசின் டிஜி லாக்கர் செயலி அல்லது https://results.digilocker.gov.in/ இணையதளம் மூலமாகவும் தங்கள் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியாகும் அதே நேரத்தில் மாணவர்களுக்கு அவர்களது பதிவு செய்த தொலைபேசி எண் மூலமாக அவர்களது மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

Post a Comment

0 Comments