சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொத்தம் 439 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தனி உதவியாளர் (நீதிபதிகள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 28
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 56,100 - 2,05,700
தனிச் செயலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
சம்பளம்: ரூ. 56,100 - 2,05,700
தனி உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
சம்பளம்: ரூ. 36,400 - 1,34,200
எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
சம்பளம்: ரூ. 20,600 - 75,900
சோப்தார்
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 137
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
வீட்டு உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 87
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
ரூம் பாய்
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
தூய்மை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 73
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
தோட்டப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
வாட்டர் மேன்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
சுகாதாரப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 49
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
வயதுத் தகுதி: 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி, எஸ்.சி.ஏ, எம்.பி.சி, பி.சி.எம், பி.சி பிரிவினருக்கு 37 வயது வரை வரம்பில் சலுகை உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பிறப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ 500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
0 Comments