மே 1 முதல் நாடு முழுவதும் வருகிறது முக்கிய மாற்றம்...!

 வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியிலும், பிற வங்கியிலும் பணம் எடுக்கும்போதும், கணக்கில் உள்ள தொகை இருப்பை (பேலன்ஸ்) காண ஏ.டி.எம்.மை பயன்படுத்தும்போதும் வசூலிக்கப்படும்.

                                                                             


இது இந்தியா முழுவதும் உள்ள சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும். ஏ.டி.எம்.களை பராமரிப்பது, பாதுகாப்பான சேவை வழங்குவதற்கு ஏற்படும் செலவுகளை சமாளிக்க இவ்வாறு கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு வாடிக்கையாளரின் சொந்த வங்கியில் ஒவ்வொரு மாமும் 5 முறை இலவசமாக பணம் எடுக்கவும், கணக்கில் இருப்பு தொகையை காணவும் முடியும்.மெட்ரோ நகரங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 3 முறை இலவசமாகவும், மெட்ரோ அல்லாத நகரங்களில் மாதம் 5 முறை இலவசமாகவும் பணம் எடுக்க/ தகவல் அறிந்துகொள்ள முடியும். இப்போது வரை இந்த அளவை கடந்த பின்னர் ரூ.21 வசூலிக்கப்பட்டு வருகிறது.

2022 முதல் இது நடைமுறை படுத்தப்பட்டது. இந்த நிலையில் வரும் மே 1ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி இந்த மாற்றத்தை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் சில இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆனால், இந்த இலவச பரிவர்த்தனை வரம்பை மீறினால், அவர்கள் இப்போது ரூ.21 என்ற கட்டணத்திற்குப் பதிலாக ரூ.23 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த உயர்வு, ஏடிஎம் மூலம் அடிக்கடி பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இலவச பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாறாது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியின் ஏடிஎம்களைப் பயன்படுத்தி மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளை செய்யலாம். மெட்ரோ பகுதிகளில், மாதத்திற்கு மூன்று இலவச பரிவர்த்தனைகள் செய்ய முடியும், மெட்ரோ அல்லாத பகுதிகளில் ஐந்து இலவச பரிவர்த்தனைகள் கிடைக்கும்.

பெரிய வங்கிகளின் ஏடிஎம் நெட்வொர்க்கை அதிகம் பயன்படுத்தும் சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அதிக பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்து, அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது அவர்களை வங்கிகளை மாற்ற யோசிக்க வைக்கும். மேலும் அவர்கள் சிறந்த சேவையை பெற முடியும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஏடிஎம் பயன்படுத்துபவர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் இலவச பரிவர்த்தனை வரம்பை பின்பற்றினால், கூடுதல் கட்டணங்களை தவிர்க்க முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் கட்டண முறைகளை பயன்படுத்த வேண்டும். இது கூடுதல் கட்டணங்களைக் குறைக்க உதவும். இந்த மாற்றம், ஏடிஎம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். மே 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், பணம் எடுக்கும் வசதியை மாற்றி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை

Post a Comment

0 Comments