TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

 

TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

புதுக்கோட்டை தேவஸ்தானம்‌ நிர்வாகத்தில்‌ காலியாக உள்ளபணியிடங்களை நியமனம்‌ செய்ய தகுதியுள்ள, இந்து மதத்தினைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.05.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பிரகதாம்பாள்‌ திருக்கோயில்‌ காலிப்பணியிடங்கள்:

ஓதுவார் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

திருக்கோயில்‌ கல்வி தகுதி:

தமிழில்‌ எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. தேவாரம்‌ பாடத்திற்கான தமிழக அரசால்‌ அங்கீகரிக்கப்பட்ட தேவார பயிற்சி பள்ளியில்‌ அல்லது தனியார்‌ தேவார பயிற்சி பள்ளியில்‌ 3 ஆண்டுகள்‌ படிப்பில்‌ சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும்‌, 45 வயது மேற்படாதவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பிரகதாம்பாள்‌ திருக்கோயில்‌ சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.4000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், 17.05.2023 அன்று அல்லது அதற்கு முன், அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Post a Comment

0 Comments