TNRD கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.62,000/- || 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கோயம்புத்தூரில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே 05/12/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது..
TNRD கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
- ஈப்பு ஓட்டுநர் – 3 பணியிடங்கள்
- இரவு காவலர் – 5 பணியிடங்கள்
TNRD பணிக்கான கல்வித்தகுதி:
- ஈப்பு ஓட்டுநர் – 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகனச் சட்டம் 1988 (முத்திய சட்டம் 59/1988)-ன்படி தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
- இரவு காவலர் – தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் துறை சம்பள விவரம்:
- ஈப்பு ஓட்டுநர் – ரூ.19,500 – 62,000/-
- இரவு காவலர் – ரூ.15,700 – 50,000/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
TNRD கோயம்புத்தூர் விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கோவை – 641018 என்ற முகவரிக்கு 05/12/2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments