TNPSC மீன்வளத்துறை துணை ஆய்வாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.1,13,500/- || சற்றுமுன் வெளியானது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு 11.11.2022 வரை ஆன்லைன் முறையில் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, தேர்வு செயல் முறை, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு மீன்வளத் துணை ஆய்வாளர் பதவிக்கு என மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.
SI பணிக்கான வயது வரம்பு:
01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி வாரியத்தால் வழங்கப்படும் மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது விலங்கியலை முக்கிய பாடமாக கொண்டு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மீன்வள அறிவியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
TNPSC தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணினி வழி தேர்வானது 07.02.2023 அன்று நடைபெற உள்ளது.
சம்பளம்:
Sub Inspector of Fisheries – ரூ.35900-113500/-
தேர்வு கட்டணம்:
- Registration Fee – ரூ .150/-
- Examination Fee – ரூ.100/-
டி.என்.பி.எஸ்.சி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் 13.10.2022 முதல் 11.11.2022 வரை விண்ணப்பிக்கலாம்.
0 Comments