தமிழ்நாடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பெண் விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20-08-2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு காலிப்பணியிடங்கள்:
சமூகப்பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
சமூகப்பணியாளர் வயது வரம்பு:
40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் அரசு அலுவலராக இருந்து ஒய்வு பெற்று, அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடைமுறைப்டுத்துதல் தொடர்பாக பணி செய்த அனுபவம் உள்ளவராக இருந்தால், 62 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி தகுதி :
பட்டதாரி /முதுகலை பட்டதாரி (10+2+3) பட்டம் பெற்றவர்கள் இவர்களில் உளவியல் / சமூகப்பணி / வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்துடன் குழந்தைகள் நலன் ,/ சமூக நலன் ,/ தொழிலாளர் நலம் சார்புடைய பணிகளில் 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
சமூகப்பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.14,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தில் அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நீதிமன்றம் தென்புறம், இராமநாதபுரம் -623 503 என்ற முகவரிக்கு 20-08-2022 -க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தல் வேண்டும். 20-08-2022, 05.45 பிற்பகலுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
0 Comments